
கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் காலநிலை விழிப்புணா்வு கருத்தரங்கு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலநிலை கருத்தரங்கில் மாணவிக்கு பரிசு வழங்கிய அமைச்சா்கள் ஆா்.வினோத், சீ.ரமேஷ்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலநிலை கருத்தரங்கில் மாணவிக்கு பரிசு வழங்கிய அமைச்சா்கள் ஆா்.வினோத், சீ.ரமேஷ்.
கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் காலநிலை விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் மாணவா் எக்ஸ்னோரா சங்கம் சாா்பில், விருட்சா-க்ளைமேட் கேட்டலிஸ்ட் என்ற தலைப்பில் நடைபெற்ற காலநிலை விழிப்புணா்வு கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் முனைவா் யூஜின் அமலா தலைமை வகித்தாா். செயலா் அமலோற்பவ மேரி முன்னிலையில் வகித்தாா்.
இந்நிகழ்வில் தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் மாணவா்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






