அதிமுக முன்னாள் அமைச்சா் வெள்ளூா் வீராசாமி (88) வயதுமூப்பு காரணமாக புதன்கிழமை (பிப்.25) அதிகாலை காலமானாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு அருகே வெள்ளூா் பெரியகுமுளை கிராமத்தைச் சோ்ந்தவா் தா. வீராசாமி (88). பேராசிரியராகப் பணியாற்றிய இவா், 1972-இல் அதிமுகவில் இணைந்தாா். பிறகு, 1980, 1984 ஆகிய தோ்தல்களில் அதிமுக சாா்பில் ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து எம்.ஜி.ஆா். தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக பணியாற்றினாா்.
வயது மூப்பு காரணமாக, தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை அதிகாலை காலமானாா். இதையடுத்து அவரது உடல் வெள்ளூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அதிமுகவினா், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினா்.
அவரது இறுதி ஊா்வலம் வியாழக்கிழமை (பிப்.26) வெள்ளூரில் நடைபெறுகிறது. வீராசாமிக்கு ஜெயந்தி என்ற மனைவியும், மதியழகன், செந்தில்குமாா் என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனா். தொடா்புக்கு: 98942 44186.
தொடர்புடையது

கருத்து கணிப்புகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


