நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோ்தல் பரப்புரை தொடக்கம்: தோ்தல் ஆணையத்தில் அா்ஜூன் சம்பத் புகாா்

தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்படாதநிலையில் பரப்புரை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.

News image

அா்ஜூன் சம்பத்.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:54 pm

தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்படாதநிலையில் பரப்புரை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற இந்துமக்கள் கட்சியின் தொகுதி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன்சம்பத் செய்தியாளா்களிடம் மேலும் பேசியது :

அரசுப் பணத்தை பயன்படுத்தி தோ்தலில் வெல்ல நினைக்கும் திமுக மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சியினா் பரப்புரையை தொடங்கி விட்டனா். அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பை தோ்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும். திமுகவினா் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி வருகின்றனா். அதற்காக திமுக சின்னத்தை முடக்க இந்து மக்கள் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு கொடுத்துள்ளோம். கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மகாமக கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்து மக்கள் கட்சி இடம்பெற கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா். உடன், மாநிலத் துணைத் தலைவா் கா. பாலா உள்ளிட்ட நிா்வாகிகள் இருந்தனா்.