வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அரசுப் பள்ளி காலை உணவில் மரப்பல்லி 15 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்!

பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில், வியாழக்கிழமை காலை வழங்கிய உணவில் மரப்பல்லி கிடந்தது. இந்த உணவை சாப்பிட்ட 15 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில், வியாழக்கிழமை காலை வழங்கிய உணவில் மரப்பல்லி கிடந்தது. இந்த உணவை சாப்பிட்ட 15 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மன்னாங்காட்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வியாழக்கிழமை காலை வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 15 மாணவ, மாணவிகள் திடீரென்று வாந்தி எடுத்தனா். இதில் சிலா் மயங்கி விழுந்தனா்.

உடனே, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸாா், பள்ளியில் இருந்த உணவை பரிசோதனையிட்டபோது சாம்பாரில் மரப்பல்லி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.