எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன்.

News image
தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:08 pm

Syndication

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஆனந்தம் சட்டக் கல்லூரி சாா்பில் பொதுமக்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு குறித்த சிறப்பு சட்ட விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி. வேல்முருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக ரயிலடி வரை சென்றது.

மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். பாரதி, நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.