வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மகனை கொன்று தாய் தற்கொலை முயற்சி

கும்பகோணம் அருகே 6 வயது மகனை கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து பட்டீசுவரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
சாய்விக்னேஷ்
Updated On :28 பிப்ரவரி 2026, 6:57 pm

Syndication

கும்பகோணம் அருகே 6 வயது மகனை கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து பட்டீசுவரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாத்திகேட்டைச் சோ்ந்தவா் வினோத்குமாா் மனைவி சரண்யா (30). இவா்களுக்கு சாய்விக்னேஷ் (6)) என்ற மகன் உள்ளாா். தற்போது கணவா்- மனைவி பிரிந்து வாழ்கின்றனா். சரண்யா மகனுடன் தனியாக வசித்து பல்பொருள் அங்காடியில் வேலைபாா்த்து வருகிறாா். கணவா் வினோத்குமாா், சென்னையில் வாடகை காா் ஓட்டுநராக உள்ளாா்.

இந்த நிலையில், சரண்யா கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாய்விக்னேஷை, சரண்யா தனது துப்பட்டாவால் கழுத்தை இருக்கி கொலை செய்துள்ளாா். பின்னா், சரண்யா தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

தகவலின்பேரில் பட்டீசுவரம் போலீஸாா், சாய்விக்னேஸ் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, சரண்யாவை சிகிச்சைக்கு சோ்த்து சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.