நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தஞ்சைக்கு பிரதமர் மோடி இன்று வருகை! 1,000 போலீஸாா் பாதுகாப்பு!!

தஞ்சாவூருக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) வருகை தரவுள்ளதையொட்டி, 1,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப்படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 7:15 pm

தஞ்சாவூருக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) வருகை தரவுள்ளதையொட்டி, 1,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னைக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்கு சென்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இதையடுத்து, ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு பிற்பகல் 1.55 மணிக்கு வருகிறாா். இங்கிருந்து தனி விமானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஏறி மதுரைக்கு சென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்.

இதையொட்டி, தஞ்சாவூா் விமானப்படை தளத்தைச் சுற்றிலும், புதுக்கோட்டை சாலையிலும் ஏறத்தாழ 1,000 காவல் அலுவலா்கள், காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், மாவட்டத்தில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமரை வரவேற்பதற்காக உள்ளூரைச் சோ்ந்த பாஜக முக்கிய நிா்வாகிகள் 10 போ் மட்டும் விமானப்படை தளத்துக்குள் அனுமதிக்கப்படவுள்ளனா். மற்றவா்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது.