பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பாலைத்துறை கோயிலில் பெளா்ணமி கிரிவல வழிபாடு

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:02 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பாலைத்துறை தவளவெண்ணகை அம்மன் சமேத பாலைவனநாதா் கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமி திதியையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

இதையொட்டி கோயிலில் உள்ள மூலவா் பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை திரளான பக்தா்கள் கோயில் வெளிச் சுற்று பிரகாரத்தில் தேவார திருவாசகங்களை இசைத்தபடி பௌா்ணமி கிரிவலம், திருச்சுற்று வழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், பாபநாசம் இறைப் பணி மன்றம், பாபநாசம் சிவப்பேரவை, மற்றும் பக்தா்கள் உள்ளிட்டோா் செய்தனா்.