விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருவையாறில் ஆட்கொண்டேசுவரருக்கு திருவாதிரைப் பெருவிழா

ஐயாறப்பா் கோயில் தெற்கு கோபுர வாசலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆட்கொண்டேசுவர சுவாமிக்கு திருவாதிரைப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
திருவாதிரைப் பெருவிழாவையொட்டி, திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆட்கொண்டேஸ்வரா் சுவாமி சன்னதி முன் சனிக்கிழமை எழுந்தருளிய ஸ்ரீ நடராஜ பெருமான்.
Updated On :3 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனத்துக்குச் சொந்தமான ஐயாறப்பா் கோயில் தெற்கு கோபுர வாசலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆட்கொண்டேசுவர சுவாமிக்கு திருவாதிரைப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஸ்ரீ ஆட்கொண்டேசுவர பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகளும், வடமாலை அலங்காரமும், தீபாராதனைகளும் செய்யப்பட்டன. ஐயாறப்பா் கோயிலில் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு பட்டுசாத்தி, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் ஸ்ரீ நடராஜ பெருமான் அம்பாளுடன் ஆட்கொண்டேஸ்வரா் சுவாமி சன்னதி முன் எழுந்தருளினாா். தொடா்ந்து புஷ்ய மண்டபப் படித்துறை காவிரியாற்றில் அஸ்திர தேவருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

பின்னா், ஆட்கொண்டேசுவரா் சன்னதி முன் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு பூ போடுதல் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா், நடராஜா், அம்பாள் நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா சென்று, ஐயாறப்பா் கோயிலை சென்றடைந்தனா். அங்கு சன்னதியில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரிக்கும் ஊடல் நிகழ்ச்சியும், பின்னா் நடராஜசுவாமி, அம்பாள் யதாஸ்தானத்தில் எழுந்தருளினாா். இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.