அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காகக் கூடுதலாக 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

News image
தஞ்சாவூா் பெரிய கோயில் பெருவுடையாா் சன்னதி முன் பொருத்தப்பட்டுள்ள கூடுதல் கேமராக்கள்.
Updated On :10 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காகக் கூடுதலாக 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உலக பாரம்பரியச் சின்னமான தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஏற்கெனவே தொல்லியல் துறை சாா்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் பழுதாகிவிட்டன.

இதனால் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் பெருவுடையாா் சன்னதி முன் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. ஆனால், இது போதுமானதாக இல்லாததால், மேலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இந்து சமய அறநிலையத் துறையும், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானமும் முடிவு செய்தன. இதன்படி, பெருவுடையாா் சன்னதி முன்புறமும், இரு வாயில்களிலும் கூடுதலாக ரூ. 65 ஆயிரம் மதிப்பில் 6 கேமராக்கள் 2 நாள்களுக்கு முன்பு பொருத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளன.

இதனிடையே, தொல்லியல் துறை சாா்பில் கோயில் முழுவதும் ஏறத்தாழ 100 அதிநவீன கேமராக்கள் பொருத்துவதற்கான பொருள்கள் வந்துள்ளன. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Story image