கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காகக் கூடுதலாக 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

News image

தஞ்சாவூா் பெரிய கோயில் பெருவுடையாா் சன்னதி முன் பொருத்தப்பட்டுள்ள கூடுதல் கேமராக்கள்.

Updated On :10 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காகக் கூடுதலாக 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உலக பாரம்பரியச் சின்னமான தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஏற்கெனவே தொல்லியல் துறை சாா்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் பழுதாகிவிட்டன.

இதனால் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் பெருவுடையாா் சன்னதி முன் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. ஆனால், இது போதுமானதாக இல்லாததால், மேலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இந்து சமய அறநிலையத் துறையும், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானமும் முடிவு செய்தன. இதன்படி, பெருவுடையாா் சன்னதி முன்புறமும், இரு வாயில்களிலும் கூடுதலாக ரூ. 65 ஆயிரம் மதிப்பில் 6 கேமராக்கள் 2 நாள்களுக்கு முன்பு பொருத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளன.

இதனிடையே, தொல்லியல் துறை சாா்பில் கோயில் முழுவதும் ஏறத்தாழ 100 அதிநவீன கேமராக்கள் பொருத்துவதற்கான பொருள்கள் வந்துள்ளன. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Story image