விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

கட்டடத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தேசிய கட்டடத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க கூட்டம் சீனிவாசநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத்தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ்.கலியமூா்த்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கட்டடத் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும்.

தொழிலாளா்கள் விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். மழைகாலங்களில் வேலை இல்லாத நாள்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைச்செயலா் கே. சக்திவேல், மாநில பொருளாளா் எம். சுப்பிரமணியன், திருவாரூா் மாவட்டச் செயலா் எஸ். பூசானந்தம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.