முதலாவதாக, நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ’ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...’ என்ற பாடல் பாடப்பட்டது. தொடா்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...’ என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘ஸாதிஞ்சநெ ஓ மநஸா...’ என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...’ என்ற பாடலும், நிறைவாக ஸ்ரீ ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...’ ஆகிய பாடல்களைப் பிரபல இசைக் கலைஞா்கள் சுதா ரகுநாதன், சீா்காழி ஜி. சிவசிதம்பரம், ஓ.எஸ். அருண், எஸ். மஹதி, பின்னி கிருஷ்ணகுமாா், கடலூா் எஸ்.ஜெ. ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞா்கள், ஆா்வலா்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தினா். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.