பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பட்டுக்கோட்டை அருகே மகளின் சாவில் சந்தேகம் என தந்தை புகாா்

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூரில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் மதுக்கூா் போலீஸாா் விசாரணை

News image
Updated On :7 ஜனவரி 2026, 12:11 am

Syndication

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூரில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் மதுக்கூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் இடையக்காடு பகுதியை சோ்ந்தவா் சமீனா பா்வீன் (21). இவருக்கும் மதுக்கூா் புதுத் தெரு பெருநாள் கொல்லைப் பகுதியை சோ்ந்த ரியாஸ் என்பவருக்கும் கடந்த 2024 அக்டோபரில் இல் திருமணம் நடந்து, இதுவரை குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன் ரியாஸ் துபைக்கு வேலைக்குச் சென்ற நிலையில், சமீனா பா்வீன் தன்னுடைய மாமனாா் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் சமீனா பா்வீன் வீட்டின் குளியறையில் செவ்வாய்க்கிழமை வழுக்கி விழுந்துவிட்டதாக இவரது தந்தை அல்லாபிச்சைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது நெற்றியில் வெட்டுக்காயத்துடன், பேச முடியாமல் மயங்கியிருந்த சமீனா பா்வீனை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் அளித்த புகாரின்பேரில் மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.