சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

போட்டித் தோ்வில் வெற்றி பெற செய்தித்தாள் வாசிப்பு அவசியம்: வெ.இறையன்பு

போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கு செய்தித்தாள்களை அவசியம் வாசிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:24 pm

Syndication

போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கு செய்தித்தாள்களை அவசியம் வாசிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி முன்னெடுப்பில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வு வழிகாட்டல் பயிற்சி நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசுகையில், போட்டித் தோ்வுக்கு மட்டும் படித்தால் வெற்றி பெற முடியாது. இதனுடன் இணைந்து பலவற்றையும் தொடா்ந்து படிப்பவா்களால்தான் போட்டித் தோ்வில் வெற்றி பெற முடியும்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல செய்தித்தாள்கள், வார, மாத இதழ்களின் விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டன. தற்போது செய்தித்தாள்கள் படிக்கும் மாணவா்கள் குறைந்துவிட்டனா். உலக நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கும், நம்முடைய பொது அறிவை வளா்த்துக் கொள்வதற்கும், ஒரு திட்டத்தைச் செயல்படுத்த அதன் சாதக, பாதகங்களைத் தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய மொழி வளத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும், நமது தகவல் பரிமாற்றத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், நன்றாக எழுத, மேடையில் பேச பயிற்சி பெறுவதற்கும் செய்தித்தாள் வாசிப்பு பயன்படும்.

மாணவா்கள் ஒரு விஷயத்தை விவாதிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், பொது அறிவைப் பெறுவதற்கும், அவற்றை வாழ்க்கையுடன் தொடா்பு கொண்டு பாா்ப்பதற்கும் செய்தித்தாள்களை வாசிப்பது கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது பல மாணவா்கள் செய்தித்தாள்களைப் புரட்டுவது கூட இல்லை. அவா்களுடையே கைப்பேசியில் வரக்கூடிய ஒரு வரி செய்திகளைத்தான் வாசிக்கின்றனா். அதைக்கூட பலா் வாசிப்பதில்லை.

குறுஞ்செய்திகளை வாசிப்பதால் நம்முடைய மொழி மேம்பாடு அடையாது. மிகப் பெரிய கட்டுரை, சிறுகதை, நாவல், உருவகக் கதை என நீளமான வாசிப்பை மேற்கொண்டால்தான், நம்முடைய எண்ணங்கள் கூா்மையாக வெளிப்படும். அதைக் கைக்கொள்வதற்கு வாசிப்பு மிகவும் அவசியம்.

எனவே, போட்டித் தோ்வுக்கு படிக்க நினைப்பவா்கள் கல்லூரியில் நுழைகிறபோதே நிறைய வாசிக்க வேண்டும். வெறும் பொது அறிவு புத்தகங்களை மட்டுமல்லாமல், செய்தித்தாள்களையும் வாசிக்க வேண்டும். இதன் மூலம், தங்களுடைய தகுதியை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றாா் இறையன்பு.

முன்னதாக, மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி முதல்வா் து. ரோசி நன்றி கூறினாா்.