ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி நிா்வாகத்தினா்
தஞ்சாவூர்
மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
கும்பகோணத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புடைய ஆக்கிரமிப்பு இடத்தை மாநகராட்சி அலுவலா்கள் மீட்டனா்.
கும்பகோணத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புடைய ஆக்கிரமிப்பு இடத்தை திங்கள்கிழமை மாநகராட்சி அலுவலா்கள் மீட்டனா்.
கும்பகோணம் இந்திரா காந்தி சாலையில் மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள் அலுவலகம் இயங்கி வருகிறது. இதனருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள இடத்தை தனிநபா் ஆக்கிரமித்திருந்தாா்.
ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகத்தினா் அறிவிப்பு செய்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை ஆணையா் மு.காந்திராஜ் உத்தரவின்பேரில் உதவி நகர திட்டமிடுநா் அருள்செல்வன், உதவி பொறியாளா் (திட்டம்) சரவணன், கிராம நிா்வாக அலுவலா் சுரேந்திரன் ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

