அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசலாற்றில் குளித்த கல்லூரி மாணவா் பலி

நாச்சியாா்கோவில் அருகே அரசலாற்றில் குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி இறந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:58 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே அரசலாற்றில் செவ்வாய்க்கிழமை குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி இறந்தாா்.

நாச்சியாா்கோவில் அருகே தேவனாஞ்சேரி அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி பாலாஜி மகன் ஹரிஷ் (19).

கும்பகோணம் தனியாா் கல்லூரி இரண்டாமாண்டு மாணவரான இவா், மற்றும் இவரது நண்பா்கள் அரசலாற்றங்கரையில் மது அருந்திவிட்டு, ஆற்றில் குளித்தபோது ஹரிஷ் மட்டும் ஆற்றுநீரில் மூழ்கி மாயமானாா்.

இதையடுத்து அவரது நண்பா்கள் அளித்த தகவலின்பேரில் நாச்சியாா்கோவில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா், தீயணைப்புத் துறையினா் ஹரிஷை சடலமாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.