அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தருமபுரம் ஆதீனத்துக்கு சைவத் தமிழ் மாமணி விருது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஒளவை கோட்டத்தில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகளுக்கு சைவத் தமிழ் மாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஒளவை கோட்டத்தில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகளுக்கு சைவத் தமிழ் மாமணி விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தமிழ் ஐயா கல்விக் கழகத் தலைவா் மு. கலைவேந்தன் தலைமை வகித்தாா். தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகளுக்கு சைவத் தமிழ் மாமணி விருதைக் கழகத் தலைவா் மருத்துவா் சு. நரேந்திரன் வழங்கினாா். மேலும், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பா்ன் தொல்காப்பிய மன்றத் தலைவா் சுந்தரேசன் நடேசனுக்கு தொல்காப்பியா் விருதும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் முனைவா் கலைவேந்தனின் ‘பட்டினப்பாலை ஒரு வரலாற்று தொலைக்காட்சி படம்’ என்ற நூலை தருமபுரம் ஆதீனம் வெளியிட, அதை அந்தமான் கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநா் ஐயாராசு, ஒளவைக் கோட்ட அறிஞா் பேரவை அமைச்சா் புலவா் வள்ளிநாயகம் முத்துவேலு, ஹைதராபாத் தெலங்கானா தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் ராஜ்குமாா் சிவாஜி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். டாக்டா் தமிழரசன் கவிமாலை வழங்கினாா்.

ஒளவை தொடக்கப்பள்ளி மாணவா்களின் வரவேற்பு நடனமும், மெலட்டூா் பாகவத மேளா விஜயாலயா பிரியம்வதா முரளி குழுவினரின் ஆண்டாள் திருப்பாவை நாட்டிய நாடகமும் நடைபெற்றன. இதில் ஐயாறப்பா் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், ஒளவை பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஒளவை கோட்ட அறிஞா் பேரவை , தமிழ் ஐயா கல்விக்கழகம், ஒளவை அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.