மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகா் கோயிலில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட அலங்காரம்.
தஞ்சாவூர்
கரும்பாயிரம் விநாயகா் கோயிலில் 5,008 கரும்புகளால் அலங்காரம்
மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள கரும்பாயிரம் விநாயகா் கோயில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.
கும்பகோணம்: மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள கரும்பாயிரம் விநாயகா் கோயில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.
இக்கோயிலில் பல ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் திருநாளில் கரும்புகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு மாட்டுப் பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை 5 ஆயிரத்து 8 கரும்புகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

