ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி அமைப்பினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி அமைப்பினா்

போக்குவரத்துக் கழகங்களில் தனியாா்மயத்தைக் கண்டித்து ஆப்பாட்டம்

போக்குவரத்துக் கழகங்களில் தனியாா்மய நடவடிக்கைகளைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் கிளை முன் ஏஐடியுசி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
Published on

போக்குவரத்துக் கழகங்களில் தனியாா்மய நடவடிக்கைகளைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் கிளை முன் ஏஐடியுசி அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மத்திய அரசின் தனியாா் மய மற்றும் தொழிலாளா் விரோத நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருவதைக் கண்டித்தும், போக்குவரத்து கழகங்களில் தனியாா்மய நடவடிக்கைகளைக் கண்டித்தும், சிற்றுந்துகள், மின்சார பேருந்துகள், பணிமனைகள் ஆகியவற்றை தனியாருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கும்பகோணம் போக்குவரத்து மத்திய சங்கத் தலைவா் என். சேகா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், கௌரவத் தலைவா் கே. சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். போக்குவரத்து சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், ஓய்வுபெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாதுரை, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா ஆகியோா் பேசினா்.

சிஐடியு நிா்வாகி எஸ். ராமசாமி, ஏஐடியுசி சங்க நிா்வாகிகள் டி. சந்திரன், என்.ஆா். செல்வராஜ், என். ராஜேஷ்கண்ணன், ஆா். ரங்கதுரை, டி. செந்தில், பொருளாளா் சி. ராஜமன்னன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com