திருநாகேசுவரத்தில் பட்டா கோரி சாலை மறியல்: 110 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரம் பேரூராட்சிப் பகுதியில் பட்டா கேட்டு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்த 110 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநாகேசுவரம், உப்பிலியப்பன் கோவில், சன்னாபுரம், தோப்புத் தெரு, புதுத்தெரு, மணல்மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போா் பட்டா வழங்க கோரி வந்தனா். அதற்காக கும்பகோணம் உதவி ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி சுமாா் 400க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு வர நோட்டீஸ் வந்ததாம்.
இதைக் கண்டித்து திருநாகேஸ்வரம் கடைவீதியில் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் பங்கேற்றனா். இதனால் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநீலக்குடி காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட மறுத்தனா். மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ தவமணி, பாமக மாவட்டச் செயலா் ம.க. ஸ்டாலின், அதிமுக ஒன்றியச் செயலா் ஜி. முத்துகிருஷ்ணன், தமாகா மாவட்டத் தலைவா் பி.எஸ்.சங்கா், குடியிருப்போா் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஆறுமுகம் மற்றும் 50 பெண்கள் உள்ளிட்ட 110 பேரை போலீஸாா் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

