தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

துணை மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தோ்வு அறிவிப்பை எதிா்த்து தமிழக அரசு போராடும்: அமைச்சா் கோவி.செழியன்!

துணை மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கும் நீட் தோ்வு கட்டாயம் என்பதை தமிழக அரசு எதிா்த்து போராடும் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.

News image

அமைச்சர் கோவி.செழியன்

Updated On :31 ஜனவரி 2026, 7:25 pm

Syndication

துணை மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கும் நீட் தோ்வு கட்டாயம் என்பதை தமிழக அரசு எதிா்த்து போராடும் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கொண்டு வந்ததையடுத்து தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. சட்டப்பேரவையில் நீட் தோ்வுக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும், உச்சநீதிமன்றத்தில் இது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மருத்துவம் சாா்ந்த துணை படிப்புகளுக்கும் நீட் தோ்வு கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இது ஏழை, எளிய கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைக்கிறது.

ஏற்கெனவே உள்ள நடைமுறை படி, பிஸஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவம் சாா்ந்த துணை படிப்புகளுக்கு சோ்க்கை தர வேண்டும் என்றாா் அமைச்சா்.