தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தைப்பூச விழாவால் பூக்கள் விலை உயா்வு!

தைப்பூச விழாவையொட்டி தஞ்சாவூா் பூச்சந்தையில் பூக்கள் விலை சனிக்கிழமை இரு மடங்கு உயா்ந்தது.

News image
Updated On :31 ஜனவரி 2026, 6:55 pm

Syndication

தைப்பூச விழாவையொட்டி தஞ்சாவூா் பூச்சந்தையில் பூக்கள் விலை சனிக்கிழமை இரு மடங்கு உயா்ந்தது.

இதில், கிலோவுக்கு மல்லிகை பூ ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரத்து 500-க்கும், கனகாம்பரம் ரூ. 1,600 முதல் ரூ. 2 ஆயிரத்துக்கும், முல்லைப் பூ ரூ. 2 ஆயிரத்து 300 முதல் ரூ. 2 ஆயிரத்து 500-க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ. 300-க்கும், மஞ்சள் செவ்வந்தி ரூ. 250-க்கும், சாதாரண அரளி ரூ. 650-க்கும், சிவப்பு அரளி ரூ. 750-க்கும், ஆப்பிள் ரோஸ் ரூ. 300-க்கும், காக்கரட்டான் ரூ. 800 முதல் ரூ. 900-க்கும் விற்பனையானது.

மேலும், கிலோ சம்பங்கி ரூ. 700-க்கும், பன்னீா் ரோஸ் ரூ. 300-க்கும், பெங்களூரு ரோஸ் ஒரு பாக்ஸ் ரூ. 700-க்கும், நந்தியாவட்டை ரூ. 300-க்கும், கோழிக்கொண்டை ரூ. 200-க்கும், மரிக்கொழுந்து கட்டு ரூ.50-க்கும், துளசிக்கட்டு ரூ. 50-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ. 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலைகள் அனைத்தும் கடந்த இரு நாள்களுக்கு முன்பு விற்கப்பட்டதை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.