தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

லஞ்ச வழக்கில் கைதான இணை ஆணையா் வீட்டில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் வீட்டில் ரூ. 3 லட்சத்தை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 12:44 am IST

தஞ்சாவூரில் ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் வீட்டில் ரூ. 3 லட்சத்தை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த ஸ்தபதியும், ஒப்பந்ததாரருமான எஸ். மதியழகன் தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள தீபாம்பாள்புரம் வன்மீகநாதா் கோயிலில் திருப்பணி செய்தாா். அதற்கான ரூ. 23.45 லட்சத்தை விடுவிப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் மு. ஜோதிலட்சுமி (47) ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டாா். இதைக் கொடுக்க விரும்பாத மதியழகன் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தாா்.

இதன்பேரில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து மதியழகனிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜோதிலட்சுமியையும், அவரது தோழியும், இடைத்தரகருமான கிரிஜாவையும் (51) வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். பின்னா், தஞ்சாவூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரையும் ஜூலை 17 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜோதிலட்சுமியும், கிரிஜாவும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதனிடையே, தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரில் வசித்து வந்த ஜோதிலட்சுமியின் வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் மேற்கொண்ட சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.