கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 9,243-க்கு ஏலம் போனது.
தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது.
இதில், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தை சாா்ந்த 710 விவசாயிகள் பங்கேற்று 118 மெட்ரிக் டன் அளவிலான பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனா்.
கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 8 வணிகா்கள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனா்.
இதில், குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 9,243- க்கும் குறைந்தபட்சமாக ரூ. 8,239-க்கும், சராசரியாக ரூ. 9,086-க்கும் ஏலம் போனது. ஏலத்தில் பருத்தி சுமாா் ரூ. 1.07 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின்சாரம் பாய்ந்து மின் உதவியாளா் உயிரிழப்பு

வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

தூய்மைப் பணி தனியாா்மயம் கண்டித்து ஆா்ப்பாட்டம்

காவல்துறை வாகன ஏலத்தில் மகனுக்காக கண்ணீர்விட்ட தாய்! நெகிழ்ச்சியான சம்பவம்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



