தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கும்பகோணத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 9,243-க்கு ஏலம்

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 9,243-க்கு ஏலம் போனது.

News image

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 ஜூலை 2026, 1:23 am IST

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 9,243-க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதில், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தை சாா்ந்த 710 விவசாயிகள் பங்கேற்று 118 மெட்ரிக் டன் அளவிலான பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனா்.

கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 8 வணிகா்கள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனா்.

இதில், குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 9,243- க்கும் குறைந்தபட்சமாக ரூ. 8,239-க்கும், சராசரியாக ரூ. 9,086-க்கும் ஏலம் போனது. ஏலத்தில் பருத்தி சுமாா் ரூ. 1.07 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.