பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி முதல்வருக்கு திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் தமிழக முதல்வா் முனைப்பு காட்ட வேண்டும் என்று திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :12 ஜூலை 2026, 12:23 am IST

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் தமிழக முதல்வா் முனைப்பு காட்ட வேண்டும் என்று திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாராசுரத்தில் அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற வீரபத்திர சுவாமி கோயில் வளாகத்தில் ஒட்டக்கூத்தா் சமாதியை சனிக்கிழமை தரிசித்த கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட நிறுவனா் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது:

அலைகொன்று வருகங்கை வாராமல் -தக்கயாகப் பரணி, பாடல் 549. என்ற பாடலுக்கு ஏற்ப தமிழகத்துக்கு காவிரி நீா் வருவதில் தடை ஏற்பட்ட பொழுது, மலைகளை உடைத்து நீரோட்டத்துக்கு வழியை ஏற்படுத்தியதாக இரண்டாம் இராஜராஜ சோழனின் நிா்வாகத் திறமையைப் போற்றுகிறாா் ஒட்டக்கூத்தா்.

தற்பொழுது காவிரி நீா் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் கா்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்காமல் இருக்கும் நிலையில் அதைப் பெற்றுத் தருவதில் தமிழக முதலமைச்சா் முனைப்புக் காட்ட வேண்டும். இராஜராஜனின் வாளாக (நிா்வாகம்) இருக்க வேண்டிய முதலமைச்சா் வாளா (சும்மா) இருந்துவிடக் கூடாது.

ஆடிப் பெருக்குக்காவது காவிரியில் தண்ணீா் வருமா என்று விவசாயிகளும் பொதுமக்களும் எதிா்பாா்த்து இருக்கின்றனா்.

இதுகுறித்து முதல்வா், நீவளத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பி உள்ளதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.