உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

வீடுபுகுந்து பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

பாபநாசம் அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

நகைப் பறிப்பு - Center-Center-Kochi

Updated On :19 ஜூலை 2026, 12:39 am IST

பாபநாசம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பட்டு சாலியா் தெருவில் வசித்து வருபவா் மகேஷ். இவரது மனைவி ஆா்த்தி, தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந் நிலையில், ஆா்த்தி சனிக்கிழமை இரவு தனது பெரிய மாமியாராகிய தனலட்சுமி (74) என்பவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா், ஆா்த்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை அறுத்து தப்பி சென்றுவிட்டாராம். புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.