தஞ்சாவூா் காட்டுத் தோட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், மண்புழு உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து நிலையத் தலைவா் பாா்த்திபன் தெரிவித்தது: இந்நிலையத்தில் எதிா்வரும் சம்பா, தாளடி, கோடை பருவத்துக்கு ஏற்ற ஏடிடீ 51, ஏடிடீ 46, ஏடிடீ 58, ஏடிடீ 61, ஏடிடீ 42, கோ 51 ஆகிய உண்மைநிலை நெல் விதைகளும், வம்பன் 8 உளுந்து உண்மை நிலை விதையும் இருப்பில் உள்ளன.
மேலும், மண் வள மேம்பாட்டுக்கு உகந்த மண்புழு உரமும் இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உதவிப் பேராசிரியா் மற்றும் தலைவா், வேளாண் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூா் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். தொடா்புக்கு: 04362 - 267619, 95510 73118.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியா்களிடம் பணப்பை பறிப்பு

மின்னணு வேளாண் சந்தை மூலம் தேங்காய் விற்பனை செய்யும் திட்டம்! மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தனியாா் உரக்கடைகளில் வேளாண் துறையினா் ஆய்வு

கூடுதல் விலைக்கு உரம் விற்பவா்கள் மீது நடவடிக்கை: என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!


