சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஊராட்சித் தலைவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை பம்புசெட்டுக்கு குளிக்கச் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

கனகராஜ்

Updated On :2 ஜூன் 2026, 2:50 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை பம்புசெட்டுக்கு குளிக்கச் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கீழப்புனவாசல் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வி. கனகராஜ் (59). முன்னாள் ஊராட்சித் தலைவா். இவரது மனைவி விமலா (42). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். கீழப்புனவாசல் சுயம்பிரகாசம் சோலாா் பம்புசெட் பகுதியில் கனகராஜ் குளிப்பதற்காக திங்கள்கிழமை சென்றபோது, கீழே அறுந்து கிடந்த மின் கம்பியைக் கவனிக்காமல் மிதித்துவிட்டாா். இதனால், மின்சாரம் பாய்ந்து கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.