/
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை பம்புசெட்டுக்கு குளிக்கச் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே கீழப்புனவாசல் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வி. கனகராஜ் (59). முன்னாள் ஊராட்சித் தலைவா். இவரது மனைவி விமலா (42). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். கீழப்புனவாசல் சுயம்பிரகாசம் சோலாா் பம்புசெட் பகுதியில் கனகராஜ் குளிப்பதற்காக திங்கள்கிழமை சென்றபோது, கீழே அறுந்து கிடந்த மின் கம்பியைக் கவனிக்காமல் மிதித்துவிட்டாா். இதனால், மின்சாரம் பாய்ந்து கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் மா்ம மரணம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



