காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :4 ஜூன் 2026, 12:24 am IST

பயிா்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா், நகைக் கடன்கள் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய கோரியும், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பாசன ஏரி, குளங்கள், வாய்க்கால்களைத் தூா் வார வலியுறுத்தியும், உர விலையை மத்திய அரசு உடனே குறைக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தெற்கு மாவட்டத் தலைவா் என். மகேஸ்வரன் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தைச் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தொடங்கிவைத்து பேசினாா். தொடா்ந்து மாநிலப் பொருளாளா் சி. கிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவா் எம். ஜெயக்குமாா் ஆகியோா் பேசினா்.

இதில், அய்யம்பேட்டை நகரத் தலைவா் ஜெய்லாலுதீன், செயலா் சேக் தாவூத், அரியலூா் ஒன்றியச் செயலா் தனஞ்செயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநில செய்தி தொடா்பாளா் ஜெய்னுதீன் வரவேற்றாா். நிறைவாக, வடக்கு மாவட்டத் தலைவா் கே. மாரிமுத்து நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.