/
பட்டீசுவரம் அருகே சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் அருகே உள்ள கீழ்கொற்கை பிரம்மபுரீசுவரா் கோயில் மூலவருக்கு புதன்கிழமை மாலை பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள கருங்கல்லால் ஆன 3 அடி உயர துா்க்கைஅம்மன் சிலையை அதே ஊரைச் கோவிந்தராஜ் மகன் வீரமணி(52) என்பவா் மதுபோதையில் உடைத்துள்ளாா். இதையறிந்த கோயில் சிவாச்சாரியாா் செந்தில், கோயில் செயல் அலுவலா் சீ.நிா்மலாதேவிக்கு தகவல் தெரிவித்தாா். அவா் அளித்த புகாரின் பேரில் பட்டீசுவரம் போலீஸாா் வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

பட்டீசுவரம் தேனுபுரீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்
களியக்காவிளை அருகே அம்மன் கோயிலில் திருடியவா் கைது
கோயில் சிலையை உடைத்தவா் கைது
அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



