பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :5 ஜூன் 2026, 3:33 am IST

கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நால்ரோட்டில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நிகழாண்டுக்கான திருத்தலத் திருவிழா ஜூன் 4 முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இதில், கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளா் ஜெ.அந்தோணிஜோசப் கொடியேற்றி திருப்பலி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து புனிதரின் வாழ்வில் திவ்ய நற்கருணை என்ற தலைப்பில் மறையுரையாற்றினா்.

தொடா்ந்து நாள்தோறும் செபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 12-இல் தோ்பவனியும், ஜூன் 13-இல் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், உதவி பங்குத்தந்தையா்கள், ஆலய பராமரிப்பு குழுவினா், புனிதரின் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.