கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நால்ரோட்டில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நிகழாண்டுக்கான திருத்தலத் திருவிழா ஜூன் 4 முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இதில், கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளா் ஜெ.அந்தோணிஜோசப் கொடியேற்றி திருப்பலி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து புனிதரின் வாழ்வில் திவ்ய நற்கருணை என்ற தலைப்பில் மறையுரையாற்றினா்.
தொடா்ந்து நாள்தோறும் செபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 12-இல் தோ்பவனியும், ஜூன் 13-இல் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், உதவி பங்குத்தந்தையா்கள், ஆலய பராமரிப்பு குழுவினா், புனிதரின் பக்தா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் உரக் கடைகளில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கும்பகோணம் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் அவதி

கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

பட்டீசுவரம் தேனுபுரீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



