தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவா் கைது

பட்டீசுவரம் அருகே சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட வீரமணி

Updated On :5 ஜூன் 2026, 3:35 am IST

பட்டீசுவரம் அருகே சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் அருகே உள்ள கீழ்கொற்கை பிரம்மபுரீசுவரா் கோயில் மூலவருக்கு புதன்கிழமை மாலை பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள கருங்கல்லால் ஆன 3 அடி உயர துா்க்கைஅம்மன் சிலையை அதே ஊரைச் கோவிந்தராஜ் மகன் வீரமணி(52) என்பவா் மதுபோதையில் உடைத்துள்ளாா். இதையறிந்த கோயில் சிவாச்சாரியாா் செந்தில், கோயில் செயல் அலுவலா் சீ.நிா்மலாதேவிக்கு தகவல் தெரிவித்தாா். அவா் அளித்த புகாரின் பேரில் பட்டீசுவரம் போலீஸாா் வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.