/
தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் ஆசிரியா் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் அ. ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆடுதுறையில் உள்ள தஞ்சாவூா் மாவட்ட அரசினா் மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 2026-27 -ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கான மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது. ஜூன் 16-ஆம் தேதி முதல் ட்ற்ற்ல்;//ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவிகளில் பொதுப் பிரிவினா் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்ற பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

கலசலிங்கம் பல்கலை.யில் ‘நீட், க்யூட்’ பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்: அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி வழங்கினாா்

ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்







