அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கும்பகோணம் ரெப்கோ வங்கியில் சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் தொடக்கம்

கும்பகோணம் ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

கும்பகோணத்தில் ரெப்கோ வங்கி கிளையில் புதன்கிழமை நடைபெற்ற வாடிக்கையாளா்களுக்கான சிறப்பு சிறுசேமிப்பு திட்ட முகாமில் பங்கேற்றோா்.

Updated On :11 ஜூன் 2026, 3:37 am IST

கும்பகோணம் ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் ரெப்கோ வங்கி கிளை அலுவலக வளாகத்தில் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சிறுசேமிப்பு திட்ட தொடக்க விழாவை இந்திய தூதரக அலுவலா் சந்திரமெளலி தொடங்கிவைத்து, சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் குறித்து பேசினாா்.

தொடக்க விழாவில் வங்கியின் உதவி பொதுமேலாளா் விக்னேஷ் பேசியது :

இந்தச் சிறப்பு சேமிப்பு திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டியும், மற்றவா்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஜூன் 10 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு சிறுசேமிப்பு திட்ட முகாமை வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சொத்து மீது அடமானக் கடன், நகை கடனுக்கு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ. 10,800 வரை வழங்கப்படுகிறது என்று அவா் தெரிவித்தாா். நிகழ்வில் ஏராளமான வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.