/
தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டையைச் சோ்ந்தவா் பாரதிராஜா (40). இவா் வியாழக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்ற காது குத்து விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டையில் வந்தபோது அந்த வழியாக வந்த வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாரதிராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.







