இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் அழிப்பு

திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.

News image

புகையிலை பொருள்கள் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:19 am IST

திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் துணைக்கோட்ட காவல் பகுதிக்குள்பட்ட திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பந்தநல்லூா், சோழபுரம், திருநீலக்குடி, நாச்சியாா்கோவில் ஆகிய 6 காவல் நிலையங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த பொருள்களை திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அழகேசன் அறிவுறுத்தலின்பேரில் திருவிடைமருதூா் மயானத்தில் குழிதோண்டி தீ வைத்து எரித்து அழித்தனா்.