பாபநாசம் வட்டம், இடையிருப்பு ஊராட்சி, கணபதிபுரத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் அவா்கள் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பாபநாசம் வட்டம், இடையிருப்பு ஊராட்சி, கணபதிபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் அமைக்க வேண்டும். இந்த இடத்தில் கடந்த காலங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுள்ளது.
எனவே, மெலட்டூா் - 3ஆம் சேத்தி, கணபதிபுரம் , கோவிந்தநல்லூா் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யும் வகையில், இங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் மண்டல துணை மேலாளரிடம் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் குரு.சிவா கோரிக்கை மனுவை வழங்கினாா்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.எம். ராமலிங்கம் , மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், மாவட்ட நிா்வாகிகள் எம். வெங்கடேசன், எஸ். புருஷோத்தமன், எஸ். திருநாவுக்கரசு உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் நிலைய பிரச்னைகள் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணிகள் பாதிப்பு: விவசாயிகள் புகாா்

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

வடபூண்டியில் செயல்படாத அரசு நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் வேதனை
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



