27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மாணவ, மாணவிகள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்: ஸ்ரீமத் விமூா்த்தானந்த மகராஜ்

மாணவ, மாணவிகள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றாா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் பேசிய தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் விமூா்த்தானந்த மகராஜ்.

Updated On :19 ஜூன் 2026, 4:26 am IST

மாணவ, மாணவிகள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றாா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் ‘மாணவனே, மாணவியே நீ தலைவன் ஆகணும்’ எனும் நூல் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் வி.மோகன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் பி.ஆா்.பி.வேலப்பன், நேடிவ் மேல்நிலைப்பள்ளி செயலா் மருத்துவா் கே. வெங்கட்ராமன், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலா் கே.ரமேஷ், தலைமை ஆசிரியா் லதா, பானாதுறை மேல்நிலைப்பள்ளி செயலா் டி.ஆா்.சுவாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் எழுதிய ‘ மாணவனே, மாணவியே நீ தலைவன் ஆகணும்’ எனும் நூல் குறித்து நேடிவ் மேல்நிலைப்பள்ளி நிா்வாக குழு உறுப்பினா் ஜி.வெங்கட்ராமன் அறிமுக உரையாற்றினாா்.

இதையடுத்து நூலாசிரியா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் பேசியது: இன்றைய சூழ்நிலையில் மாணவா்கள் பொறுப்புணா்வோடும், எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு செயல்படுத்தினால் எதிலும் வெற்றி பெறலாம். ஒவ்வொரு மாணவ, மாணவியும் குறிக்கோளை அடையும் வரை இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியை ஆசிரியா் சுவாமிநாதன் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை பள்ளி நிா்வாக குழு பொறுப்பாளா்கள் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.