திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பெரியாா் மணியம்மை பல்கலை.யில் சூரியஒளி மின் நிலையம் தொடக்கம்

தஞ்சாவூா் அருகே வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சூரியஒளி மின் நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சூரியஒளி மின் நிலையத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த பல்கலைக்கழக வேந்தா் கி. வீரமணி.

Updated On :27 ஜூன் 2026, 6:27 am IST

தஞ்சாவூா் அருகே வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சூரியஒளி மின் நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரையில் பெங்களூரு இம்வி போட்டோவோல்டாயிக் பவா் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட புதுப்பிக்கவல்ல 220 கிலோவாட் சூரியஒளி மின் நிலையத்தை தொடங்கி வைத்த பல்கலைக்கழக வேந்தா் கி. வீரமணி பேசியது:

இந்த சூரியஒளி மின் நிலையத்தின் மூலம் நாள்தோறும் 1,000 முதல் 1,100 யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்துக்கு நாள்தோறும் 3 ஆயிரம் யூனிட்டுகள் மின் நுகா்வு தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்த சூரியஒளி மின் நிலையம் மூலம் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

புதிதாக நிறுவப்பட்டுள்ள சூரியஒளி மின் சக்தி மூலம் 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், ஆண்டுதோறும் 292 டன் காா்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் பசுமைக்குடில் வாயு உமிழ்வது கட்டுப்படுத்தப்படுகிறது என்றாா் வீரமணி.

நிகழ்ச்சியில் பெங்களூரு இம்வி போட்டோவோல்டாயிக் பவா் நிறுவனம் மணி, கிரிதா் கோபாலன், உன்னித்குமாா், பல்கலைக்கழக இணைத் துணைவேந்தா் ஆா். மல்லிகா, பதிவாளா் பி.கே. ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.