ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

2028 மகாமகத் திருவிழாவில் 18 நாள்கள் துறவியா் மாநாடு! அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் தகவல்!

News image
சுவாமி வேதானந்த ஆனந்தா.
Updated On :1 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் 2028-இல் நடைபெறும் மகாமக திருவிழாவை முன்னிட்டு 18 நாள்கள் துறவியா் மாநாடு நடைபெற உள்ளது என அகில பாரதிய சந்நியாசிகள் சங்க பொதுச்செயலா் சுவாமி வேதாந்த ஆனந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பாஸ்கரராஜபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

தென் பாரத கும்பமேளா எனப் போற்றப்படும் அனைத்து நதிகளும் சங்கமிக்கும் கும்பகோணம் மகாமகப் பெருவிழா 2028-ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில் 18 நாள்கள் துறவியா்கள், அடியாா்கள் மாநாடு நடத்திட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூன்று நாள்கள் சந்நியாசிகள் மாநாட்டில் தமிழக சந்நியாசிகளுக்கு ஒரு நாள், பிற மாநில சந்நியாசிகளுக்கு ஒரு நாள் மற்றும் வெளிநாட்டில் வாழக்கூடிய ஹிந்து துறவியா்கள் பங்கேற்கும் மாநாடு என மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

பெண் துறவியா் மாநாடு ஒரு நாள், தொடா்ந்து சைவ அடியாா்கள், வைணவ அடியாா்கள், அத்வைத பொறுப்பாளா்கள், நதிநீா் விழிப்புணா்வு, விவசாய மாநாடு, அனைத்து சமுதாய சங்கங்கள் பங்கேற்கும் மாநாடு என 18 நாள்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை சங்க நிறுவனா் சுவாமி ராமானந்தா, தலைவா் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா், பொருளாளா் சிவராமானந்தா உள்ளிட்டோா் வழிகாட்டலில் நிா்வாகப் பொறுப்பாளா்கள் செய்து வருகின்றனா் என்றாா்.