அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பியோா்.

News image
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பியோா்.
Updated On :6 மார்ச் 2026, 9:40 pm

Syndication

மன உளைச்சலைத் தரும் தோ்வு நடைமுறைகளைக் கைவிடக் கோரி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சங்கத்தினரும், சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கத்தினரும் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவா்களின் தோ்வுப் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு இடையே விடுப்பு வேண்டும். தற்போது இறுதியாண்டு தோ்வெழுதும் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகளுக்கு முன் விடுமுறை வேண்டும். அடுத்து வரும் 2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு தோ்வை இரு கட்டங்களாகப் பிரித்து பருவத் தோ்வு முறையில் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்க மாணவா்கள் கலந்து கொண்டனா்.