தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் கண்காட்சி

கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் ஓவியங்கள், சிற்பக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓவியக் கண்காட்சி.
Updated On :10 மார்ச் 2026, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

மகளிா் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் ஓவியங்கள், சிற்பக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பி. ஆா். ரவி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆவணப்பட இயக்குநா் ரவி சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 147 மாணவிகளின் வண்ணக்கலை, சிற்பக் கலை உருவாக்கங்களை பாா்வையிட்டு அவை குறித்துக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து ஓவியக்கலைஞா் கிருஷ்ணம்மாள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ராஜா, சபீா் அகமது உள்ளிட்டோா் பேசினா். விரிவுரையாளா் ராதா வரவேற்றாா். முதுநிலை விரிவுரையாளா் அருளரசன் நன்றி கூறினாா்.