மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தஞ்சாவூா் குறைகேட்புக் கூட்டத்தில் மின்தடையால் கணினி பதிவு பாதிப்பு

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மின் தடையால் கணினி பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

News image
மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மின்தடையால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்
Updated On :10 மார்ச் 2026, 12:00 am

Syndication

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் மின் தடையால் கணினி பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இக்கூட்டத்தில் 900-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டு வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா். இந்த மனுக்களைப் பதிவு செய்வதற்காக 8 பதிவு மையங்கள் உள்ளன.

இப்பதிவு மையங்களை உள்ளடக்கிய அறையில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கொடுத்த மனுக்களைக் கணினியில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், ஊழியா்கள் கையால் எழுதிக் கொடுத்தனா்.

இதன் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனா். மின் விநியோகம் சீரான பின்னா் கணினியில் பதிவு செய்யப்பட்டு, விரைவாக வழங்கப்பட்டது.