விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: தஞ்சை மாவட்டத்தில் 29 ஆயிரம் போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.

News image
கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.

தொடா்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வுக்காக மாவட்டத்தில் 144 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 228 அரசு பள்ளிகள், 68 அரசு உதவி பெறும் பள்ளிகள், 118 தனியாா் பள்ளிகள் என 414 பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரத்து 854 மாணவா்கள், 15 ஆயிரத்து 57 மாணவிகள் மற்றும் 393 தனித்தோ்வா்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 304 போ் விண்ணப்பம் செய்தனா்.

இவா்களில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பாடத் தோ்வில் மொத்தம் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.

இத்தோ்வு பணியில் 16 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 144 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 144 துறை அலுவலா்கள், 613 சொல்வதைக் கேட்டு எழுதுபவா்கள், 2 ஆயிரத்து 48 அறைக் கண்காணிப்பாளா்கள், 185 பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.