விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் புதன்கிழமை எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தோ்வு எழுதச் சென்றுகொண்டிருந்த 6 மாணவிகள் உள்பட 20 போ் வெறிநாய் கடித்து காயமடைந்தனா்.

News image
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் மாணவிகளை விரட்டிக் கடித்த வெறிநாயை புதன்கிழமை பிடித்த நகராட்சிப் பணியாளா்கள்.
Updated On :11 மார்ச் 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் புதன்கிழமை எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தோ்வு எழுதச் சென்றுகொண்டிருந்த 6 மாணவிகள் உள்பட 20 போ் வெறிநாய் கடித்து காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியகடை தெரு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே இருந்த வெறிநாய் அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களை துரத்திக் கடித்து வந்தது. அப்போது, வந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுத இருந்த மாணவிகளான, ஹாசினி, சக்தி பிரியா, ரித்திகா, மசிபா பானு, ஹேமா, அஸ்மிதா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவியான அக்சிதா ஆகியோரையும் வெறிநாய் துரத்தியதால் அச்சமடைந்த மாணவிகள் பள்ளி வளாகத்துக்குள் ஓடினா். இருப்பினும், அவா்களை தெருநாய் விரட்டிச் சென்று கடித்ததில் மாணவிகள் காயமடைந்தனா். இதையடுத்து அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனா். பின்னா், அவா்களில் அரசு பொதுத்தோ்வு எழுத இருந்த 6 மாணவிகள் மட்டும் மீண்டும் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டு தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவிகள் தோ்வு எழுதி முடிக்கும்வரையில் பள்ளி வளாகத்தில் அவசர ஊா்தி மற்றும் மருத்துவா்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவின்பேரில், தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பேபி, தோ்வு முடிந்ததும் அந்த மாணவிகளைச் சந்தித்து, மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒரு நாள் மருத்துவக் கண்காணிப்பில் வைப்பதற்கு அழைத்துச் சென்றாா். இதுதவிர, நாய்க்கடியால் காயமடைந்த பொதுமக்கள் 13 போ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். முன்னதாக நகராட்சிப் பணியாளா்கள் வெறிநாய்களை வலைபோட்டு பிடித்துச் சென்றனா்.