தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதில், ரூ. 15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் நடைமேடை, முன்பதிவு மையம், முகப்பு சீரமைப்பு, நுழைவுவாயில், பூங்கா அமைத்தல், குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட பணிகளைக் கூடுதல் பொது மேலாளா் பாா்வையிட்டாா். அப்போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலகிராம்நெகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, கூடுதல் பொது மேலாளரிடம் காவிரி ‘டெல்டா’ ரயில் பயணிகள் சங்கச் செயலா் வெ. ஜீவக்குமாா், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், இராம. சந்திரசேகரன், கண்ணன், வழக்குரைஞா் முகமது பைசல் ஆகியோா் அளித்த கோரிக்கை மனு:
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் நடைமேடை நிழற்குடைகளை அதிகரிக்க வேண்டும். சுரங்கப் பாதையை நீட்டித்து தர வேண்டும். படிக்கட்டுகள் உள்ள இடங்களில் சாய்தளம் அமைக்க வேண்டும். ஆட்டோ நிறுத்தத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். பிரீபெய்டு ஆட்டோ ஏற்பாடு செய்து தர வேண்டும். வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயிலை 7 நாள்களுக்கு இயக்க வேண்டும். தஞ்சாவூா் ரெட்டிப்பாளையத்தில் மீண்டும் ரயில் நிலையத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தொடர்புடையது

ராம்கோ சிமெண்ட் பணியாளா்கள் 61 போ் ரத்த தானம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வரவேற்பு

தஞ்சாவூரிலிருந்து ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


