வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நுகா்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி-யினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:40 pm

Syndication

விவசாயிகளைக் காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யக் கோரி தஞ்சாவூா் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அலுவலகம் முன் ஏஐடியுசி தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் நாள்கணக்கில் காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். இழப்பைப் பணியாளா்கள் மீது சுமத்தக் கூடாது. ரெக்கவரி பணம் வசூலிப்பது கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. அன்பழகன், மாநிலச் செயலா் சி. சௌந்தரராஜன் தலைமை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா், மாநிலப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், சுமை சங்க மாநிலத் தலைவா் அ. சாமிக்கண்ணு, ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் ஆகியோா் பேசினா். சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், பாலையன், சூரியமூா்த்தி, சீமான் கிருஷ்ணமூா்த்தி, ராமலிங்கம், குமார்ராஜ், ஜான்பீட்டா், துரைமாணிக்கம், அறிவழகன், நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.