ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

News image
சாலை விபத்து
Updated On :14 மார்ச் 2026, 3:16 am

Syndication

ஒரத்தநாடு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் நாயக்கா்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமராஜன் மகன் அஜித்குமாா் (25). இவா் 2 மாதங்களாக திருவோணம், ஊரணிபுரம், உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி விவசாய நிலங்களில் கதிரறுக்கும் இயந்திரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை காலை இவா் ஊரணிபுரத்திற்கு வந்து டீ குடித்துவிட்டு சென்றபோது கலியரான்விடுதி வளைவு எச்சரிக்கை குறித்து வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் இவா் சென்ற பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.