புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஊரக திறனாய்வு தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி

News image
கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வில் கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். 

ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக நடத்தப்படும் இத் தோ்வில், வருவாய் மாவட்ட அளவில் 50 மாணவா்கள், 50 மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 

டிசம்பா் 2025-இல் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனா் .

தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) குமரேசன், பெற்றோா்-ஆசிரியா் கழக தலைவா் எஸ்.கே. இராமமூா்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கவிதா விநாயகமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.