நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவிக்கு பாலியல் தொல்லை மருத்துவமனை ஊழியா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 7:22 pm

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனை ஊழியரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (23) தொழில்நுட்பநராக பணியாற்றி வருகிறாா்.

இவரிடம் அதே கல்லூரியில் தொழில்நுட்பநா் படிப்பில் படிக்கும் 17 வயது மாணவி மாா்ச் 12-ஆம் தேதி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வழி கேட்டாா். அப்போது, மாணவியை மனோஜ்குமாா் அப்பிரிவுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மனோஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.